சிலுவை நம் வாழ்வின் மறுபக்கம்!
இறை நம்பிக்கையாளர்கள் சரியானவற்றைத் தேர்ந்து கொள்ளவும், தேர்ந்து கொண்ட வாழ்வில் நிலைத்திருக்கவும், தேர்ந்து கொண்ட நம்பிக்கையை செயல்களில் வெளிப்படுத்தவும் இறைவன் நமக்கு அழைப்புவிடுக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியன் பற்றி எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரசு அவரால் விடுவிக்கப்பட்ட யூத மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அவர்களுடைய எருசலேம் நகரம் நிலைகுலைந்து கிடக்கின்றது. எனவே எருசலேம் நகரையும், கோவிலையும் சீர்செய்ய விரும்புகின்றார்கள். இந்நிலையில் ஒரு குழுவினர் கடவுளின் மீது நம்பிக்கையற்றவர்களாய் பாரசீக அரசோடு இணைந்து ஆலயத்தை கட்டுவது என்று எண்ணம் கொண்டார்கள். ஏனெனில் கடவுள் தாம் தங்களை எதிரிகளிடம் ஒப்புவித்தார் என்று கடவுளுக்கு எதிராக முனுமுனுத்தார்கள். கடவுளுக்கு எதிராக செயல்பட்டார்கள். மற்றவர்களே, கடவுளின் வழியை பின்பற்றி அவருக்கு உகந்தவர்களாக வாழ்வது என்று தீர்க்கமாக வாழ்ந்தார்கள். அதாவது, பாரசீகத்தையும், அதனுடைய வழிபாடுகளையும் விட்டுவிட்டு, கடவுளையும் அவரது திருச்சட்டங்களை...


Comments